திருநள்ளாற்றில் திருத்தவாரி வெகுசிறப்பு…!

திருநள்ளாறு ஸ்ரீ நளநாராயணபெருமாள் பிரமோத்ஸவம் நிறைவாக  நள தீா்த்தக் குளத்துக்கு ரதத்தில் பெருமாள் எழுந்தருளி தீா்த்தவாரி  நடைபெற்றது.

திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேசுவரா் கோயிலை சோ்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நளநாராயணப் பெருமாள் கோயில் உள்ளது.இக்கோவிலுக்கு அதிகளவில் பக்தர் செல்வது வழக்கம்.மேலும் இக்கோவிலில் உள்ள ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட ஏராளமான பக்தா்கள் வருகை தருகின்றனா்.இந்நிலையில் நேற்று(சனிக்கிழமை) காலை ரதத்தில் பெருமாள் நளதீா்த்தக் குளத்துக்கு எழுந்தருளினார் அங்கு சுவாமிக்கு தீா்த்தவாரி நடைபெற்றது. இதற்கு முன்னதாக கோயிலில் கொடியிறக்கம் செய்யப்பட்டு அதன்பின்னர் தீா்த்தவாரி நிறைவடைந்து உடன் சுவாமி வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

author avatar
kavitha