மேற்கு வங்க ரயில்நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் மீது மின்சாரம் தாக்கி விபத்து.! பதைபதைக்கும் காட்சிகள் இதோ…

பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த போது மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி டிக்கெட் பரிசோதகருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கரக்பூர் ரயில் நிலையத்தில், பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த டிக்கெட் பரிசோதகரின் மேல் மின் கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி  தீக்காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் பொழுது எடுக்கப்பட்ட வீடியோக் காட்சியில், டிக்கெட் பரிசோதகர்  பிளாட்பாரத்தில் யாரோ ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த மின் கம்பி ஒன்று அறுந்து அவர் மேல் விழுந்தது. மின்சாரம் தாக்கப்பட்டவுடன் அவர் எந்தவித அசைவும் இன்றி ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். சிறுது நேரத்தில் அங்கிருந்த மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்பொழுது மின்சாரம் தாக்கப்பட்ட அந்த நபர் உடலில் தீக்காயங்களுடன்  உயிருடன் காப்பாற்றப்பட்டார்.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.

Leave a Comment