யாருமே வந்து பார்க்கல,20க்கும் மேற்பட்ட முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது – பொன்னம்பலம்.!

சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பொன்னம்பலம் வீடு திரும்பிய பின்னர் தனக்கு 20க்கும் மேற்பட்ட தருணங்களில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வந்தது என்று தெரிவித்துள்ளார்.

ஸ்டண்ட் மாஸ்டராக அறிமுகமாகிய பொன்னம்பலம் நாளடைவில் சினிமாவில் நடிகராகவும் பிரபலமானார். தமிழ் சினிமாவில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திரங்களிலும் நடித்த இவர் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக பிரச்சினையால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்
இவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவியதோடு, பொன்னம்பலம் அவர்களின் இரு குழந்தைகளின் படிப்பு செலவையும் கமல்ஹாசன் ஏற்று கொண்டார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பின்னர் அளித்த பேட்டியில் கூறியதாவது, நிறைய படங்களில் நடித்து சம்பாதித்தும் தனக்கென்று எதுவும் சேர்த்து வைக்கவில்லை. சிறுநீரக பிரச்சினையால் தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் விற்று தான் மருத்துவ செலவுகளை பார்த்தேன். அப்போது தான் சரத்குமாரின் உதவியை நாடியதாகவும், அவர் பணம் கொடுத்து உதவியதோடு, கமல் சாரும் உதவினார்.

இதே போன்று என்னுடன் நடித்த ரஜினி, விஜய், விக்ரம், லாரன்ஸ் உள்ளிட்ட அனைவரும் தனக்கு உதவினால் நன்றாக இருக்கும் என்று கூறியுள்ளார். தான் மருத்துவ செலவுகளுக்காக போராடிய தருணம் மிகவும் கொடுமை, 200க்கும் மேற்பட்ட தருணங்களில் தற்கொலை செய்யும் எண்ணம் வந்தது. மேலும் ஸ்டண்ட் யூனியனில் இருந்து தனக்கு யாரும் உதவவோ, பாரக்கவோ வரவில்லை, அது தனக்கு மிகவும் வருத்தம் தான் என்று கூறியுள்ளார் .