இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – பொன்ராதாகிருஷ்ணன்!

இந்தியுடன் தமிழை சேர்த்து கொலை செய்தவர்கள் திராவிட கட்சியினர் – என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய கடந்து சென்று உள்ளார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலில் எதையும் எதிர் கொண்டு வெற்றி பெறலாம் என்பதை சாதித்து காட்டியவர் என கூறியுள்ளார்.

மேலும் அதே நம்பிக்கை பிரேமலதாவிடம் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைவதாக கூறி உள்ளார். கடந்த 65 ஆண்டுகளில் தமிழகத்தில் திராவிட கட்சிகள் இந்தி மொழியை மட்டுமல்ல தமிழ் மொழியையும் சேர்த்து அழித்துள்ளது என பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

author avatar
Rebekal