முதல்வரின் தாயார் மறைவுக்கு தொல் திருமாவளவன் இரங்கல்

முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் தவசாயி சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது.முதல்வர் பழனிசாமி தனது தாயாரின் உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இந்நிலையில் முதல்வரின் தாயார் மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் அருமை தாயார் தவசாயி அம்மாள்(93) காலமானதையறிந்து வேதனைப் படுகிறேன்.மாண்புமிகு முதல்வர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது தாயாரின் மறைவையொட்டி துக்கம் விசாரித்தேன். விசிக சார்பில் ஆறுதல் மற்றும் இரங்கல் தெரிவித்தேன்.மறைந்த அன்னை தவசாயி அம்மாள் அவர்களுக்கு அஞ்சலியைச் செலுத்துகிறேன்.அவரை இழந்து துயருரும் முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

author avatar
Castro Murugan