நான் திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணம்…முதல் முறையாக மனம் திறந்த எஸ்.ஜே.சூர்யா.!

இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராகவும் கலக்கி கொண்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா தற்போது பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். அந்த வகையில், RC 15, மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இதனை தவிர்த்து ஒரு படத்தை இயக்குவதற்கான வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

sj surya

இந்த நிலையில், 54 வயதான எஸ்.ஜே. சூர்யா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இவருக்கு எப்போது தான் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் காத்துள்ள நிலையில், தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து முதல் முறையாக எஸ்.ஜே. சூர்யா சமீபத்தில் பேசியுள்ளார்.

இதையும் படியுங்களேன்- இதுக்குமேல காட்ட முடியாது… உள்ளாடையுடன் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்க வைத்த ரம்யா பாண்டியன்.!

sj surya

இது குறித்து அவர் பேசியது  “நான் சினிமாவில் ஆபத்தான சில விஷயங்களில் துணிந்து இறங்க வேண்டியுள்ளது. சினிமாவில் சம்பாதித்த மொத்த பணத்தையும் நான் இயக்கி நடித்த நியூ படத்தில் முதலீடு செய்தேன். அந்த படம் வெற்றி பெற்றது.

sj surya

ஒருவேளை “நியூ” திரைப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்து இருந்தால் என் நிலைமை மிகவும் மோசமாக மாறி இருக்கும். அந்த கஷ்டமும் என்னுடனேயே போய் இருக்கும். ஆனால் திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருந்திருந்தால் அது அவர்களையும் பெரிய அளவில் பாதித்து இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment