மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது – அமைச்சர் மனோ தங்கராஜ்

இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட். 

2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்து ட்விட் செய்துள்ளார்.

அந்த ட்விட்டர் பதிவில், ‘2017-2021 வரை 2,900-க்கும் மேற்பட்ட வகுப்புவாத & மதக்கலவர வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மோடி அரசின் சாதனைகளில் இதுவே மிகபெரியது. இது பாஜகவின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி. எதற்காக இந்த உலகம் நம்மை வியந்து பார்க்கின்றதோ இல்லையோ இதற்காக நிச்சயம் வியந்து பார்க்கும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment