இது உலக அழிவுக்கு அறிகுறி! நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி!

நெற்றியில் கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி. 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள, இடும்பன்  நகரை சேர்ந்த அழகம்மாள் என்பவர் கடந்த இருபது ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வந்துள்ளார்.  இந்நிலையில்,இவர் வளர்த்த ஆடு  ஒன்று, இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

அந்த இரண்டு குட்டிகளில், ஒரு ஆட்டுக்குட்டிக்கு, நெற்றியில் கண்கள் இருந்துள்ளது. இதனை கண்டு ஆச்சரியம் அடைந்தார் அழகம்மாள். இதனை தொடர்ந்து இந்த அதிசய   ஆட்டுக்குட்டியை காண அப்பகுதி மக்கள் கூடினர்

இந்த ஆட்டுக்குட்டியை பார்க்க  வந்த முதியவர்கள், ஆட்டுக்குட்டிக்கு நெற்றிக்கண் திறந்திருப்பது போல பிறந்திருப்பதால், இது உலக அழிவுக்கு அறிகுறி இருப்பது போல் அச்சம் தெரிவித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.