வாகனத்தை பெற நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியில் தேவையில்லாமல் சுற்றுபவர்களின் இருசக்கர வாகனங்களை போலீசார் அபகரித்துள்ளனர்.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளியில் தேவையில்லாமல் சுற்றி திரிந்தவர்களை பிடித்து, போலீசார் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து, திருவண்ணாமலை ஆட்சியர் அவர்கள் கூறுகையில், ‘வாகனத்தை பெற நீதிமன்றத்தில் அபராதம் செலுத்த வேண்டும்.’ எனக் கூறியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.