34.4 C
Chennai
Friday, June 2, 2023

40 லட்சம் வாடகை…25 கோடி வருமானம்..! ஆப்பிள் நிறுவனத்தின் அரிய சாதனை..!

இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை நிலையங்கள் தலா ரூ.22 முதல்...

200 இந்திய மீனவர்களை விடுவிக்க பாகிஸ்தான் அரசு முடிவு.!

அரேபிய கடல் எல்லையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 200 இந்திய...

கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நிறைவு!

கரூரில் 8 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை...

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை – முக்கிய குற்றவாளி கைது!

ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் கைது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஹரியானவை சேர்ந்த முக்கிய குற்றவாளி ஆசிப் கைது செய்யப்பட்டார்.  ஹரியானா – ராஜஸ்தான் எல்லையிலுள்ள ஆரவல்லி மலைப்பகுதிகளில் பல சவால்களுக்கிடையே துப்பாக்கி முனையில் ஆசிப் கைது செய்யப்பட்டார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி 12-ஆம் தேதி தொடர்ந்து 4 ஏடிஎம்களில் ரூ.72.50 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது. கொள்ளை வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டு ரூ.20 லட்சம் ரொக்கம், 3 கார்கள் மற்றும் கண்டெய்னர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், ஏடிஎம் கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை கைது செய்ய 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடந்தது.

முக்கிய குற்றவாளியை ஆசிப்பை பிடித்த தனிப்படைக்கு டிஜிபி சைலேந்திரபாபு ரூ.1 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டு தெரிவித்தார். மேலும், திருவண்ணாமலை 4 ஏடிஎம்களில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஏற்கனவே, ரூ.20 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ரூ.15 லட்சம் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.