காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 16 மேசைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ஈரோடு கிழக்கில் 5 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், சுமார் 21,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.