தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைப்பது நடக்காது – வைகோ

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இவரது சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்தவகையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த மண்ணிருக்கும் வரை சி.பா.ஆதித்தனாரின் புகழ் இருக்கும்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறினார். இதையடுத்து பேசிய வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருமையாகவும், சிறப்பாகவும் வழிநடத்தப்படுகிறது. அதை சீர்குலைக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைக்கிறார்கள். அது நடக்காது எனவும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment