ஒரு வகையில் இவர்கள் இருவரும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர் – இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்

இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள்.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள  நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  இதனால், மக்கள் தங்களது முக்கியமான தேவைகளுக்கு கூட வெளியில் செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, திரையுலக பிரபலங்களான ரிஷி காபூர் மற்றும் இப்ரான் கான் ஆகியோர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளனர். இவர்களது மரணம் திரையுலகினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்திய நிலையில், இவர்களது இறுதி சடங்கிற்கு யாராலும் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. 

இந்நிலையில், இவர்களது மரணம் குறித்து இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்கள் கூறுகையில், ‘இர்பான்கான், ரிஷிகபூர் ஆகிய இருவரும் மக்களுக்காக தங்களை அர்ப்பணித்தவர்கள். ஆனால் இறுதிச் சடங்குக்கு யாரும் செல்லக் கூட முடியாத இந்த நிலையில் அவர்கள் மரணம் என்பது துரதிர்ஷ்டவசமானது. இது ரமலான் புனித மாதம். ஒருவகையில் அவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளனர்.’ என தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.