வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் – ப.சிதம்பரம்

காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக என ப.சிதம்பரம் பேசியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27-ஆம் தேதி  நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஒவ்வொரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

ப.சிதம்பரம் பேச்சு 

P. Chidambaram

இந்த நிலையில், ஈரோட்டில் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், பாஜக ஆளும் மாநிலங்களில் வேலை இல்லாத நிலையில் பிழைக்க வழி இல்லாமல் வேலை கிடைக்கிறது என்று தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து எவரும் வேலை இல்லாமல் அங்கே செல்வதில்லை. காமராஜர், அண்ணா, பெரியார் உள்ளிட்டோர் வகுத்த கொள்கைகளுக்கு எதிரான கட்சி தான் பாஜக என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment