இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது – திருமாவளவன்

மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொன்னார்? என திருமாவளவன் கேள்வி. 

விடுதலை சிறுத்தைகள்  கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் பத்மஶ்ரீ சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மரியாதை செலுத்திநார்.

அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன், மதுரை எய்ம்ஸ் வேலையை தொடங்காத போது, பாதிக்கு மேல் முடிந்துவிட்டது என ஜே.பி.நட்டா எப்படி சொல்லினார்?; இந்த மண்ணில் அவர்களின் ஜம்பம் எடுபடாது என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், அதிமுக-பாஜக கூட்டு சதியை முறியடித்து ஆட்சி அமைத்தது தான் திமுக அரசு. அதை குறைவாக எடை போடக்கூடாது; கருணாநிதிக்கு வரலாற்று சின்னம் அமைப்பது தேவைதான். அதை எந்த அளவில்,என்ன செலவில் செய்வது என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment