இட தகராறில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட தியேட்டர் உரிமையாளர்! 2 பேர் படுகாயம்!

தியேட்டர் உரிமையாளர் இடதகறாரில், துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம்.  

திண்டுக்கல் மாவட்டம், பழனி நரிக்கல்பட்டி சேர்ந்தவர் இளங்கோ.  இவருக்கு அப்பர் தெருவில் 12  செண்ட் இடம் உள்ளது. இந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, பழனியில் தியேட்டர் நடத்திவரும் நடராஜன் என்பவர், தனக்கு சொந்தமான இடம் என கூறி அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, இளங்கோவின் உறவினர்களான பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோரும் நடராஜனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  இந்த தகராறில் நடராஜன் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த  துப்பாக்கி சூட்டில், பழனிசாமியின் வயிற்றிலும், சுப்பிரமணியத்தின் தொடையிலும், குண்டுகள் பாய்ந்து உள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும், பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பழனிசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இந்நிலையில், போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிற நிலையில், நடராஜனை கைது செய்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment