எத்தியோப்பியாவில் பேருந்து பயணிகள் மீது துப்பாக்கி சூடு – 34 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் பேருந்து பயணிகள் மீது துப்பாக்கி சூடு – 34 பேர் உயிரிழப்பு!

எத்தியோப்பியாவில் துப்பாக்கி இந்திய ஒருவர் பேருந்து பயணிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு எத்தியோப்பியாவில் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்த பயணிகள் மீது துப்பாக்கி ஏந்தியவர் நடத்திய தாக்குதலில் பயணிகள் 34 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாலும், பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழக்கும் நிலையில் உள்ளனராம்.

இதுகுறித்து எத்தியோப்பியாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைய குழு, இதுவரை 34 பேர் உயிரிழந்திருந்தாலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், இது போன்று துப்பாக்கி சூடு கடந்த சில நாட்களுக்கு முன்பதாக நடந்ததாகவும் அதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *