கண் மருந்திற்கு பதிலாக நகத்தில் ஒட்டும் பசை ஊற்றிய பெண்மணி!

கண் எரிச்சலாக இருக்கிறது என கண் மருந்துக்குப் பதிலாக இரவு நேர தூக்கக்கலக்கத்தில் நகத்திற்கு ஒட்டும் பசையை கண்ணில் ஊற்றிய பெண்மணி.

இரவு நேரத்திலும், சரி பகல் நேரத்திலும் சரி சிலர் தூங்கி விட்டாலே தூக்கத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் நடந்து கொள்வார்கள். ஆனால் முடித்த பின்பும் அதே தூக்கக்கலக்கத்தில் ஏதாவது தவறு செய்யக் கூடியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது போல மெக்சிகனில் உள்ள பெண்மணி ஒருவர் இரவு நேரத்தில் கண் எரிச்சலாக இருக்கிறது என்பதற்காக தூக்கத்திலேயே தனது பர்சை தேட ஆரம்பித்துள்ளார். பர்சில் இருந்த கண் சொட்டு மருந்து எடுத்துக் கொள்வதாக நினைத்து, தனது நகத்திற்கு ஒட்டக் கூடிய பசையை எடுத்து கண்ணில் கூறியுள்ளார்.

உடனடியாக அது பசை என உணர்ந்து கொண்ட பெண்மணி கண்ணை கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளார். இருந்தாலும் அது விரைவில் ஒட்டக்கூடிய பசை என்பதால் கண்கள் மூடி உள்ளது. ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் அப்பெண் மனிதனைத் தவிர்த்து அவரது கணவரை அழைத்து கதறி உள்ளார். உடனடியாக அவரது கணவர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது கண்களை திறந்து, பசை விடப்பட்ட கண்ணில் இருந்த கான்டாக்ட் லென்சை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். தற்போது அந்தப் பெண்மணி நல்ல முறையில் உள்ளார். ஆனால் அவரது கண்ணிமைகள் சில இதில் பறிபோனது ஆகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal