கோவாக்சின் உற்பத்தி செய்யும் பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை- WHO உத்தரவு..!

கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் அவசரகால பயன்பாட்டு பட்டியலுக்கு,பாரத் பயோடெக்கிலிருந்து ‘கூடுதல் தகவல்’ தேவை என்று WHO தெரிவித்துள்ளது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு,அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி WHO வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் சமர்பித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து,பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் (பிபிஐஎல்) நிறுவனம்,கோவாக்சின் தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு பட்டியலை (ஈயூஎல்) பெறுவதற்காக,ஏற்கனவே 90 சதவீத ஆவணங்களை உலக சுகாதார அமைப்புக்கு சமர்ப்பித்துள்ளதாகவும், மீதமுள்ள ஆவணங்கள் ஜூன் மாதத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும்,மேலும்,கோவாக்ஸின் தடுப்பூசியை அவசர கால பயன்பாடு பட்டியலில் சேர்ப்பது தொடர்பான முதல்நிலை கூட்டத்தை மே-ஜூன் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசிடம் தகவல் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் பயோடெக் துறையின் மூத்த அதிகாரி பிபிஐஎல் எம்.டி டாக்டர் வி கிருஷ்ணா மோகன்,கோவாக்சினுக்கான விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிய, முக்கிய அதிகாரிகளுடனான கூட்டத்தை நடத்தினார்.அதில்,மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா,சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரிகள் மற்றும் உயிரி தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அந்தக் கூட்டத்தின் போது,கோவாக்சின் ஏற்கனவே 11 நாடுகளிடமிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல் பெற்றுள்ளது என்றும்,ஏழு நாடுகளில் உள்ள மற்ற 11 நிறுவனங்களிடமிருந்தும் தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கோவாக்சின் உற்பத்திக்கு ஆர்வம் இருப்பதாகவும்,

மேலும்,அமெரிக்காவில் கோவாக்சினின் சிறிய அளவிலான மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்காக,அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளின் இறுதி கட்டத்தில்  நிறுவனம் உள்ளது என்றும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில்,கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசிக்கு, அவசரகால பயன்பாட்டு பட்டியலை (EUL) பெறுவதற்கு பாரத் பயோடெக்கிலிருந்து “கூடுதல் தகவல்கள்” தேவை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

Recent Posts

பேட் ரூம் காட்சியில் படு கிளாமராக நடித்த பிரியா ஆனந்த்! அதுவும் அந்த புது படத்திலா?

Priya Anand : நடிகை பிரியா ஆனந்த்  படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…

20 mins ago

காமெடி வேற லெவல்! சிரிக்க வைக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ டிரைலர்!

Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…

1 hour ago

பட்ஜெட் விலையில் அசத்தல் 5G ஸ்மார்ட்போன் !! ரயில்மி சி 65யின் அம்சம், விலை விவரம் இதோ !!

Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…

1 hour ago

அதிர்ச்சி ரிப்போர்ட்.! 75% பேர் போலியான DeepFake விடீயோக்களை பார்த்துள்ளனராம்..!

DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…

1 hour ago

தினமும் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான்..

Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…

2 hours ago

உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார்! யுவராஜ் சிங் பேச்சு!

Abhishek Sharma : உலக கோப்பைக்கு அபிஷேக் சர்மா சரிப்பட்டு வரமாட்டார் என யுவராஜ் சிங் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் அபிஷேக்…

2 hours ago