சாத்தான் குளத்தில் பக்கத்து வீட்டிற்கு டிவி பார்க்க சென்ற 7 வயது சிறுமிக்கு ஏற்பட்ட விபரீதம்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் தந்தை – மகன் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது, அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள, கல்விளை இந்திரா நகரைச் சேர்ந்த உச்சிமாகாளி என்பவர், கணவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். இவர் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, வழக்கம் போல் அவர் தோட்ட வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது அந்த குழந்தைகள், அருகிலுள்ள முத்தீஸ்வரன் என்பவரது வீட்டில் டி.வி பார்க்கச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, உச்சிமாகாளியின் மகன் மட்டும் வீடு திரும்பிய நிலையில், மகள் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், கிராமத்தின் அருகே உள்ள பாலத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த சிறிய டிரம்மில், சிறுமியின் உடல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அந்த டிரம்மை, முத்தீஸ்வரனும், அவரது நண்பன் நந்தீஸ்வரனும் தங்கள் டி.வி.எஸ் எக்செல் வாகனத்தில் வைத்து எடுத்துச் சென்றதை கிராம மக்கள் பார்த்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த இருவரையும் பிடித்து, பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் விசாரித்ததில், சிறுமி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகவும், பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட இருவர் மீதும் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், முத்தீஸ்வரனின் தாய் மற்றும் தந்தை தலைமறைவாகி உள்ள நிலையில், எதற்காக அந்த சிறுமி கொலை செய்யப்பட்டார் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Mutton pickle-மட்டன் ஊறுகாய் செய்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம் . தேவையான பொருட்கள் : மட்டன் =1/2 கிலோ மஞ்சள் தூள் =1 ஸ்பூன்…
8 வடிவ நடை பயிற்சி-எட்டு வடிவ நடை பயிற்சி செய்யும் முறை அதன் பயன்கள்,தவிர்க்க வேண்டியவர்கள் பற்றி இப்பதிவில் காணலாம். 8 வடிவ நடை பயிற்சி செய்யும்…
Heat Wave : வழக்கத்தை விட இந்தாண்டு வெப்பநிலை அதிகரிக்க 2 காரணங்களை இந்திய வானிலை ஆய்வு மைய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். வழக்கத்தை விட இந்தாண்டு வெயிலின்…
Mumbai Indians : ஐபிஎல் தொடரில் நட்சித்திர அணியான மும்பை இந்தியன்ஸ் 7 தோல்விகளுக்கு பிறகும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்புகளை பற்றி பார்ப்போம்.…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகர் அருகே ஆவியூரில் உரிமம் பெற்ற கல் குவாரியும், வெடி…
Watermelon seeds-தர்பூசணி விதைகளின் ஆரோக்கிய நன்மைகளை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தர்பூசணியை சாப்பிட்டுவிட்டு அதன் விதைகளை தூக்கி எரிந்து விடுவோம். ஆனால் அந்த விதைகள் நம்மில் பலரும்…