கோவை நகை கொள்ளை.! தீரன் பட பாணியில் திருடனை மத்திய பிரதேசம் புகுந்து தூக்கிய தமிழக போலீசார்.!

தீரன் பட பாணியில் கோவையில் திருடி வெளி மாநிலம் சென்ற திருடர்களை அங்கு வைத்தே தமிழக காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டு காரணமாக தமிழகத்தில் திருடிவிட்டு, வெளிமாநிலத்தில் தப்பி சென்ற திருடர்களை அவர்கள் ஊருக்கே சென்று கைது செய்துள்ளனர்.

கோவையில் சுமார் 6.5 கிலோ தங்க நகைகளை ஒரு கும்பல் திருடி சென்றுள்ளது. இந்த கொள்ளை கும்பல்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர்.

அதில் அந்த திருட்டு கும்பல் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா பகுதியில் இருப்பதை அறிந்து தமிழக போலீசார் அங்கு விரைந்துள்ளனர். தீரன் அதிகாரம் ஒன்று பட பாணியில் அவர்கள் ஊருக்குள் புகுந்து திருடர்களை கைது செய்துள்ளனர் தமிழக போலீசார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment