நானே வருவேன் கதை அபாரமாக இருக்கும் – கலைப்புலி தாணு..!!

நானே வருவேன் கதை அபாரமாக இருக்கும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். 

இயக்குனர் செல்வராகவன் தற்போது சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்து விட்டு நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிப்பதாகவும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற ஜூலை மாதம் முதல் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது ” நானே வருவேன் திரைப்படம் ஒரு அபாரமான கதை . படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மிகவும் சிறப்பாக இருக்கும் அதற்காகவே பல விருதுகள் கிடைக்கும்”. என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.