நாள் முடிவில் வீழ்ச்சியடைந்த பங்குச்சந்தை.! சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் சரிவு.!

கடந்த சில வாரங்களாக இந்திய பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 200 புள்ளிகள் முதல் 350 புள்ளிகளுக்கு மேல் சரிந்தும், நிஃப்டி 50 புள்ளிகள் வரை சரிவுடன் வர்த்தகமாகி வந்தது. நேற்று செவ்வாய்க்கிழமை விஜயதசமி விடுமுறையை முன்னிட்டு பங்குச்சந்தை நிறுத்திவைக்கப் பட்டிருந்தது. இன்று மீண்டும் தொடங்கிய நிலையில் ஏற்றத்துடன் வர்த்தகமானது. இருந்தும் வர்த்தக நாளின் முடிவில் சரிவை சந்தித்துள்ளது.

அதன்படி, இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று 64,619 புள்ளிகள் என ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை பிஎஸ்இ சென்செக்ஸ் வர்த்தக நாளின் முடிவில், 522.82 புள்ளிகள் சரிந்து 64,049.06 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதோடு, தேசிய பங்குச்சந்தை என்எஸ்இ நிஃப்டி 159.60 புள்ளிகள் சரிந்து 19,122.15 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது.

முந்தைய வர்த்தக நாளின் முடிவில் சென்செக்ஸ் 64,571 புள்ளிகளாகவும், நிஃப்டி 19,281 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தது. பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.18 டாலர் விலை குறைந்து 87.89 டாலராக விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் 1 பிபிஎல் கச்சா எண்ணெயின் விலை 13.00 அல்லது 0.19% குறைந்து ரூ.6,961 ஆக விற்பனையாகி வருகிறது.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இந்த மாறுதலால், சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், மாருதி சுசுகி இந்தியா, லார்சன் & டூப்ரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றமடைந்துள்ளன. இண்டஸ்இண்ட் வங்கி, எச்சிஎல் டெக்னாலஜிஸ், ஐடிசி லிமிடெட், பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

author avatar
செந்தில்குமார்
நான் செந்தில்குமார், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்கிறேன். செய்தி ஊடகத்தின் மீதான ஆர்வத்தினால், ஒரு வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். டெக்னாலஜி, க்ரைம், விளையாட்டு, தமிழ்நாடு முதல் உலக செய்திகள் வரை அனுபவம் உள்ளது.