கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது – எஸ்.ஜெய்சங்கர்!

கிழக்கு லடாக்கில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.
ஏற்கனவே சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான எல்லையில் போர் பதற்ற சூழ்நிலைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில், இந்த மோதலில் கிழக்கு லடாக் பகுதியில் தற்போது  நிலைமை மோசமாக உள்ளது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், எல்லையின் நிலைமையை உறவு நிலையிலிருந்து இணைக்க முடியாது என கூறியுள்ளார்.
மேலும் இந்த பிரச்சனையில், அண்மையில் அவர் எழுதி வெளியிட்ட தி இந்தியா வே எனும் புத்தகத்தை குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்பொழுது லடாக் பகுதியில் இந்தியா துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீனா குற்றம் சாட்டி இருந்தாலும், இந்திய அதை ஏற்கவும்வோ மறுக்கவோ இல்லை இருப்பினும் அந்த பகுதியில் அதிகமாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை நீடிப்பதாக கூறப்படுகிறது.
author avatar
Rebekal