பூஜையுடன் தொடங்கியது பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு .!

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது. 

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது.

கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்திருந்தார்.

அதன்படி, மிரட்டலான சாமி போஸ்டருடன் பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்குவார் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் எனவும் கடந்த ஜூலை மாதம் வெளியானது.

இதையடுத்து தற்போது படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜையில், விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய எஸ்.ஏ சந்திரசேகர் குத்துவிளக்கேற்றி வாழ்த்தினார். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

 

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.