உருவாகிறது ‘அனிமல்’ இரண்டாம் பாகம்.! களமிறங்கும் விஜய் பட நடிகை…

தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ரஷ்மிகா நடித்த ‘அனிமல்’ திரைப்படம், வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படத்தில் வரும் நிறைய ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகளை கொண்டுள்ளதாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக தூள் கிளப்பி வருகிறது. டிசம்பர் 1ஆம் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும்  இதில், ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், எதிர்பார்த்ததை விட டபுள் வெற்றியை தந்துள்ள அனிமல் திரைப்படத்தின்  இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படம் விரைவில் ஆயிரம் கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதரவளித்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்! அமீர் அறிக்கை!

ஒரு வேலை இரண்டாம் பாகம் உருவாகுவது உண்மை என்றால், முதல் பாகத்தில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். அதன் இரண்டாம் பாகத்தில் படத்தில் நடிக்க போகும் ஹீரோவுக்கு ஜோடியாக, மாஸ்டர் படத்தில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.