ராணிப்பேட்டையில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள்..! 4 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

ராணிப்பேட்டையில் நூதன முறையில் கொள்ளையடித்த கொள்ளையர்கள் தாக்கியதில், 4 பேர் மருத்துவமனையில் அனுமதி. 

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கன்னிகாபுரம் என்ற கிராமத்தில் புஷ்கரன் என்பவர் அவரது தாய் மற்றும் பாட்டி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டை நேற்று இரவு மர்ம நபர்கள் தட்டி உள்ளனர். அப்போது யார் என்று கேட்டுள்ளனர். அப்போது கத்தியை காட்டி மிரட்டி, வீட்டை உடைக்க முயன்றனர்.

இதனை சுதாரித்துக்கொண்ட புஸ்கரன் மற்றும் அவரது தாய் கதவை திறக்க மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மர்ம நபர் ஒருவர் கதவு வழியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் வீட்டில் இருந்தவர்கள் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலுள்ள 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும், அவர்கள் வீட்டைவிட்டு செல்லும் அந்த வீட்டில் இருந்த நபர்கள் மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றுள்ளனர். மர்ம நபர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.