போக்குவரத்து இடையூறு.! டிடிஎஃப் வாசனின் ரசிகர்களை விரட்டியடித்த போலீசார்.!

கடலூர் புதுப்பாளையத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக கூடிய டிடிஎப் வாசனின் ரசிகர்களை போலீசார் விரட்டியடித்து கலைத்துள்ளனர். 

யூடியூபில் விதமான பைக்குளில் வெவ்வேறு இடங்களுக்கு சென்று வீடியோ பதிவிட்டு இளைஞர்கள் மத்தியில் குறிப்பாக 2K கிட்ஸ்கள் மத்தியில் மிக பிரபலமான யு-டியூர் டிடிஎஃப் வாசன்.

இவர் இன்று கடலூர் புதுப்பாளையம் அருகே வந்துள்ளார். இவரை காணுவதற்காக அப்பகுதியில் உள்ள இவரது ரசிகர்கள் குவிந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அங்கு போலீசார் வந்து போக்குவரத்தை சரிசெய்யும் நிலை ஏற்பட்டது. பின்னர் டிடிஎஃப் வாசன் ரசிகர்களை கலைந்து போக சொல்லியும் அவர்கள் கலையாமல் அங்கேயே இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால், அவர்களை கலைக்க ரசிகர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், டிடிஎஃப் வாசன் ரசிகர்கள் பலர் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் பலர் மீது போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவும் செய்தனர்.

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment