பல பெண்களை திருமணம் செய்ததாக வாலிபர் கைது..!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு கீழையூர் பகுதியை சார்ந்த சந்தோஷ் என்பவர் சத்யா என்ற பெண்ணை திருமணம் செய்து திருப்பூரில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் சத்தியா திருப்பூர் மத்திய காவல் நிலையத்தில் தனது கணவர் காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். சத்யாவின் புகாரை ஏற்ற போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சந்தோஷ் திருப்பூரை சேர்ந்த சசிகலா என்பவரை சந்தோஷ்  திருமணம் செய்து கொண்டு தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் வசித்து வருவதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சந்தோஷம் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சந்தோஷ ஏற்கனவே பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக தெரியவந்துள்ளது என கூறப்படுகிறது.

author avatar
murugan