நடிகர் கலாபவன் மணி சிலையில் வழியும் ரத்தம்?வைரலாகும் புகைப்படம்

அந்த சிலை பைபரால் செய்யப்பட்டது. சென்ற வருடம் கேரளாவில் வந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளே கை ,கால்களை இணைக்கும் இடத்தில் உள்ள இரும்பு ராடு துருபிடித்திருக்கலாம்

நடிகர் கலாபவன் மணி தென்னிந்தியா சினிமாவில் மாபெரும் நடிகராக வலம் வந்தவர்.இவர் தமிழ் , மலையாளம் , கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

நடிகர் கலாபவன் மணி மர்மமான முறையில் மரணம் அடைந்தார்.அவர் மரணம் பற்றிய விசாரணை இன்னும் நடந்து  கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் சென்ற வருடம் அவரது ரசிகர்களாலும் , குடுப்பத்தினராலும் அவரது சொந்த ஊரான சாலக்குடியில் சிலை வைக்கப்பட்டது.

தற்போது அந்த சிலையில் இருந்து  சிவப்பு நிறத்தில் ரத்தம் வடிவதாக புகைப்படங்கள் வெளியாகி கேரளா முழுவதும் பரவியது.

இந்நிலையில் அந்த சிலை செய்தவரை அழைத்து விசாரித்தனர். அந்த சிலை பைபரால் செய்யப்பட்டது. சென்ற வருடம் கேரளாவில் வந்த வெள்ளத்தில் சிக்கி உள்ளே கை ,கால்களை இணைக்கும் இடத்தில் உள்ள இரும்பு ராடு துருபிடித்திருக்கலாம்.

அதனால் தற்போது  வெயிலில் உருகும் பைபருடன் சேர்ந்து துரு சிவப்பு நிறத்தில் வரலாம் என அவர்  கூறியுள்ளார்.

 

 

author avatar
murugan

Leave a Comment