பேச்சிப்பாறை அணைக்கு 9,000 கன அடி நீர்வரத்து ..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக மலையோரப்பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், பேச்சிபாறை மற்றும் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று மதியத்திற்கு பிறகு பெய்த கனமழை காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணையின் நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்தது.

இதனால் பொதுப்பணித்துறையினர் உபரிநீரை திறந்து விட்டனர். இன்று அதிகாலையில் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து 17,320 கன அடியாக வந்துகொண்டிருந்தது. அதன் பின்னர் தண்ணீரின் அளவு சற்று குறைந்து தற்போது 9,000 கன அடியாக வந்து கொண்டுஇருக்கிறது.

மேலும் பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.90 அடியாக இருந்து வந்தது. அணையிலிருந்து 11,300 கன அடிநீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டதால் குழித்துறை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது.