பொன்னியின் செல்வன் குறித்து எம்.ஜி.ஆர் விதித்த ஒரே கட்டளை.! கமல் கூறிய ரகசிய தகவல்.!

இயக்குனர் மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன்” படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில்
திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு படத்திற்கான இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.இந்த இசை வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த், கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்களேன்- எம்.ஜி.ஆர் டூ கமல்ஹாசன்.. கமல் டூ மணிரத்னம்.! பொன்னியின் செல்வன் கடந்து வந்த பாதை… வெளியான ராஜ ரகசியம்.!

இந்த நிகழ்ச்சியில் கலந்து பேசிய கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தை சீக்கிரம் எடுத்துரு என்று தன்னிடம் எம்.ஜி.ஆர் சொன்னதாக தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” எம்.ஜி.ஆர் அவர்கள் பொன்னியின் செல்வன் படத்தின் கதையை முதலில்தான் வாங்கி வைத்திருந்தார். அவரிடமிருந்து நான் வாங்கினேன். அப்போது என்னிடம் எம்.ஜி.ஆர் கூடிய விரைவில் இப்படத்தை எடுத்துவிடு என்றார்.

நானும் அந்த படத்தை எடுப்பதற்கான பலமுறை முயற்சிகள் செய்தேன். ஆனால் நடக்கவில்லை. அதனை தற்போது மணிரத்னம் நிகழ்த்தி காட்டியுள்ளது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது”  என்ற சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment