ஓரினச்சேர்க்கைக்கு மறுத்த முதியவர்! கழுத்து நெரித்து கொலை செய்த இளைஞர்!  

ஓரினச்சேர்க்கைக்கு இணங்க மறுத்த முதியவர் பொன்ராமை, அருண்குமார் என்ற இளைஞர்  முதியவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கெங்குவார்பட்டி கிராமத்தை சேர்ந்த முதியவர் பொன்ராம். இவருக்கு வயது 70. இரண்டு நாட்களுக்கு முன்பு இவர் வீட்டில் இறந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவரது ஆடை கலைந்து இருந்ததால் சந்தேகமடைந்த அவரது மகள் மாரியம்மாள், தனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் முதியவரின் உடல் தேனி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. அதில் முதியவர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் முதியவரின் வீட்டிற்கு வந்து சென்றவர்கள் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி அருண் குமார் என்பவர் சிக்கினார்.

அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான்தான் முதியவரை கொலை செய்ய ஒப்புக் கொண்டதாக தெரிவித்துள்ளார். அருண்குமாரும் அவரது நண்பர் ஒருவரும் தன்பாலின ஈர்ப்பு உள்ளவர்களாக இருந்துள்ளனர். அவர்கள் முதியவரின் வீட்டருகில் அடிக்கடி தனிமையில் இருப்பது வழக்கம். இந்நிலையில் நண்பருக்கு திருமணம் ஆனதால் அருண்குமார் இரண்டு நாட்களுக்கு முன்பு, இரவில் மது போதையில் முதியவர் வீட்டுப்பக்கம் சென்றுள்ளார். முதியவரிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனையடுத்து முதியவர் கத்தியதால் பயத்தில் அவரது கழுத்தை பிடித்து நெரித்து கொலை செய்துள்ளார் அருண்குமார் என விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.