அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில் 14 பேர் பலி !!!பலியானவர்களின் எண்ணிக்கை உயரும் ??!!!

  • அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதல்.
  • இந்த சூறாவளி ஜார்ஜியா , தெற்கு கரோலினா ,புளோரிடா ஆகிய நகரங்களில்  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் சூறாவளி தாக்குதலால் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.இதில் பல வீடுகள் சேதமடைந்தன. தகவல் அறிந்து அங்கு வந்த பேரிடர் நிவாரண படையினர் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சூறாவளி ஜார்ஜியா , தெற்கு கரோலினா ,புளோரிடா ஆகிய நகரங்களில்  பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூறாவளியில் சிக்கி  14 பேர் பலியாகி உள்ளனர்.
சூறாவளியில் சிக்கி இறந்தவர்களில் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் சூறாவளியில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை உயர கூடும் எனவும் கூறியுள்ளனர்.
இதனை அடுத்து சூறாவளியில் சிக்கி காயமடைந்த பலர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
author avatar
murugan

Leave a Comment