உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் 9வது கட்ட பேச்சுவார்த்தை என விவசாயிகள் பிரதிநிதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது. வரும் 15-ஆம் தேதி நாடு தழுவிய போராட்டதிக்ரு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பிறகு போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், நீதிமன்றம் உத்தரவை பொறுத்தே மத்திய அரசுடன் வரும் 9-ஆம் தேதி பேச்சுவார்த்தை என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனிடையே, புதிய சட்டங்களை திரும்ப பெறுதல், குறைந்த ஆதார விலையை உறுதிப்படுத்துதல் போன்றவைகள் விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் இதுவரை 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
இறுதியாக நடந்த 8வது விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை கூட தோல்வியில் முடிந்ததை தொடர்ந்து, மீண்டும் வரும் 9-ஆம் தேதி விவசாய பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் விவசாயிகள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
KPK Jeyakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமாரை காணவில்லை என அவருடைய மகன் உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். நெல்லை…
Nepal Currency : இந்திய எல்லைகளை உள்ளடக்கி புதிய வரைபடத்துடன் நேபாள அரசு புதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட உள்ளது. இந்திய எல்லைகளுக்கு அருகாமையில் உள்ள…
Hardik Pandya : நேற்று நடைபெற்ற மும்பை போட்டியில் எதுவுமே சரியாக அமையவில்லை என போட்டி முடிந்த பிறகு தோல்வி பெற்றதன் காரணங்களை விளக்கி கூறி இருந்தார்…
Wrestler Hamida Banu: இந்தியாவின் முதலாவது மல்யுத்த வீராங்கனை ஹமிதா பானுவை சிறப்பிக்கும் வகையில் கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. புகழ்பெற்ற மல்யுத்த வீரரை பாபா பஹல்வானை 1…
A.R.Rahman : ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி பார்க்கமுடியாமல் போன டிக்கெட் தொகை திரும்ப கிடைக்காத அஸ்வின் மணிகண்டம் என்பவருக்கு ரூ.67 ஆயிரம் வழங்க குறைதீர்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பெங்களூரு அணியும், குஜராத் அணியும் மோதுகிறது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய 51-வது போட்டியில்…