மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது

மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது.
திருச்சியில் உள்ள மணப்பாறையை அடுத்த  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  2 வயது சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான்.
சுர்ஜித்தை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த நிலையில்  மீட்பு பணி நடைபெறும் இடத்திற்கு புதிய ரிக் இயந்திரம் வந்தடைந்தது. முதல் ரிக் இயந்திரத்தை விட 3 மடங்கு வேகத்தில் இந்த இயந்திரம் பள்ளம் தோண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.