டி.கே. சிவக்குமாருக்கு 20 அடி உயர ஆப்பிள் மாலை..!

காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான டி .கே சிவகுமார்  சட்டவிரோதமாக பணமாற்றம் வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கைது செய்யப்பட்டார். கைது செய்ய ப்பட்ட டி .கே சிவகுமார்  திஹார் சிறையில் அடைத்து வைத்திருந்தனர்.இவரது  ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்றம் நிராகரித்தது.
இதைத்தொடர்ந்து அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை தொடர்ந்து கடந்த 23-ம் தேதி சிவகுமாருக்கு நிபந்தனை ஜாமீன் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியது. 50 நாள்கள் சிறையில் இருந்த பின் ஜாமினில் வெளியான சிவகுமார் டெல்லி சென்று காங்கிரஸ் கட்சியின்  தலைமை அலுவலகத்தில் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார்.
பின்னர் தனது சொந்த ஊரான பெங்களூருக்கு திரும்பினார். அங்கு அவருக்கு தொண்டர்கள் மற்றும் ஆதரவு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். நடனக்கலைஞர், மேளதாளங்கள் என பெங்களூர் விமான பகுதியிலேயே உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதில் குறிப்பாக 20 அடி கொண்ட ஆப்பிள் மாலை அனைவரையும் கவர்ந்தது.
100 கிலோ எடை கொண்ட இந்த ஆப்பிள் மாலை லாரி மூலம் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கிரேன் உதவியுடன் ஆப்பிளை சிவகுமாருக்கு அணிவித்து  தொண்டர்கள் தங்கள் வரவேற்பறை வெளிப்படுத்தின.