வரலாற்றில் இன்று தான் மும்பை தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன…!!

வரலாற்றில் இன்று மார்ச் 12, 1993ஆம் ஆண்டு இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையை நிர்மூலமாக்கும் வகையில் பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. இதில் 257 பேர் உயிரிழந்தனர். 713 பேர் படுகாயமடைந்தனர்
மதியம் 1.33 மணியில் இருந்து 3.40 மணிவரை அடுத்தடுத்து இந்த குண்டு வெடிப்புகள் நடந்து மும்பையை அதிர வைத்தது.
மும்பை ஸ்டாக் எக்சேஞ்ச், கதா பஜார், சேனாபவன், செஞ்சுரி பஜார், மாகிம், ஏர் இந்தியா கட்டிடம், ஜவேரி பஜார், ஓட்டல் சீராக், பிளாசா தியேட்டர், ஜாகு ஓட்டல், விமான நிலையம், விமான நிலைய ஓட்டல் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு ஆளானது.
இந்த தாக்குதலில் தான் முதல் முறையாக சக்தி வாய்ந்த ஆர்.டி.எக்ஸ் வகை வெடி மருந்துகள் பயன்படுத்தப்பட்டன.. இந்த பயங்கரவாத தாக்குதலின் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் தாவூத் இப்ராஹிம் மற்றும் டைகர் மேமன் உள்ளிட்டோர் இந்தியாவை விட்டு தப்பி ஓடி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கின்றனர்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment