கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா முழுவதிலும் பெரும் பாதிப்பு தற்பொழுது ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் பொருளாதார விளைவுகளை குறித்து தொடர்ந்து விமர்சித்து வரக்கூடிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் தற்போது நாட்டில் 23 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது குறித்து அவர் கூறுகையில், கொரோனா பெருந்தொற்றை மத்திய அரசு கையாண்ட விதத்தை தான் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும், மத்திய அரசு கையாண்ட விதத்தால் நாட்டில் 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இது குறித்து 1004 வல்லுநர்களை வைத்து அறிவுபூர்வமாக தான் ஒரு ஆய்வை மேற்கொண்டதாக கூறியுள்ளார்.
அவர் நடத்திய ஆய்வின் மூலம் நடுத்தர மக்கள் ஏழைகளாகவும் மாறிக் கொண்டிருக்கிறார்கள் என தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கும், இவர்களை விட வறுமையில் உள்ள ஏழை வர்க்கத்திற்கும் மோடி அரசு என்ன செய்திருக்கிறது எனவும், 23 கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே தள்ளப்பட்டதற்கு காரணம் மோடி அரசின் இயலாமையும், தவறான கொள்கையும் தான் என்று குற்றம் சாட்டுவது நியாயம் தானே எனவும், சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்.
CSK old Fan : 103 பழையமையான சிஎஸ்கே ரசிகருக்கு, சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனான எம்.எஸ்.தோனி அவருக்கு ஒரு அன்பு பரிசை கொடுக்கும் வீடியோவானது பார்ப்போர்…
Kamal Haasan : உத்தமவில்லன் பட விவகாரத்தில் கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் புகார் அளித்துள்ளது. ரமேஷ் அரவிந்த் என்பவர் இயக்கத்தில் நடிகர்…
Weather Update: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது. அக்னி நட்சத்திர வெயில் என்று சொல்லப்படும் "கத்திரி வெயில்' நாளை முதல்…
Covaxin : எங்கள் தடுப்பூசியில் பக்க விளைவுகள் இல்லை என கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் சுமார் 2 வருடங்கள்…
Gold Price: தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.800 குறைந்ததால் மக்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி…