வைகோ மகனுக்கு முக்கிய பொறுப்பு – பொதுக்குழு ஒப்புதல்..!

இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,  மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மதிமுக பொதுக்குழு கூட்டம் 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஏற்கனவே, மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோவுக்கு பொறுப்பு வழங்கப்படவுள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், இதற்க்கு மதிமுக கட்சியில் பலர் ஆதரவித்த நிலையில் சில எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

வைகோ மகனுக்கு பொறுப்பு 

இந்த நிலையில், இன்று வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற மதிமுக பொதுக்குழு கூட்டத்தில்,  மதிமுக தலைமைக் கழக செயலாளராக துரை வைகோ ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இந்த கூட்டத்தை, அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் புறக்கணித்த நிலையில், கட்சிக்கு எதிராக பேசுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தரவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.