காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரபலம் மரணம்..! கே.எஸ்.அழகிரி ட்வீட்..!

தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு காலமானார். 

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரசின் முன்னணி செயற்பாட்டாளருமான திரு. கே. பாலசுப்பிரமணியன் (எ) சேலம் பாலு அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமது இளமைப் பருவம் முதல் மாணவர் காங்கிரசில் இணைந்து, பெருந்தலைவர் காமராஜர் தலைமையை ஏற்று, தேசிய இயக்கத்தின் கொள்கை சார்ந்து தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் கொள்கை முனைப்போடு செயல்பட்டு அறிவுசார்ந்த அணுகுமுறையின் மூலம் கட்சியின் வளர்ச்சிக்கு முழுநேரமாக அயராது பாடுபட்டவர்.

கட்சிப் பணியை தமது குறிக்கோளாக ஏற்று வாழ்நாள் முழுவதும் சேவை மனப்பான்மையோடு பணியாற்றிய திரு. சேலம் பாலசுப்பிரமணியன் அவர்களது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment