சென்னை காசிமேட்டில் கடலுக்கு சென்ற 10 மீனவர்கள் மாயம்..!

காசிமேட்டில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை.

கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து காசிமேடு நாகூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் தேசப்பன் , கண்ணன் , முருகன் , சிவகுமார், பார்த்திபன், பாபு, லட்சுமணன், ரகு உள்ளிட்ட 10 மீனவர்கள் தங்களுக்கு தேவையான 7 நாட்களுக்கு உணவு பொருட்களை எடுத்துக் கொண்டு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர்.

இந்நிலையில் 20 நாட்கள் கடந்தும் இதுவரை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்களின் குடும்பத்தினர் காசிமேடு மீன் துறை உதவி இயக்குனர் வேலன் என்பவரிடம் புகார் அளித்தனர்.

இந்நிலையில் இதனை தொடர்ந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற சென்னை மீனவர்களை கண்டுபிடிக்க புதுச்சேரி ஒடிசா மற்றும் ஆந்திரா அந்தமான் பகுதியில் உள்ள காவல் படையினர் கப்பல் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் மீனவர்களை தேடி வருகின்றனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.