கரகாட்ட நிகழ்ச்சிக்கு கடும் கட்டுப்பாடு.! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது. – என உயர்நீதிமன்ற மதுரை கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

மதுரை மாவட்டம் மேல்பட்டி கிராமத்தில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கரகாட்டம் நடத்த அனுமதி கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டு இருந்தது.

இதனை விசாரித்த நீதிபதிகள், கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி அளித்துள்ளனர். அதன்படி, கரகாட்டம் ஆடுபவர்கள் நாகரிகமாக உடை அணிய வேண்டும். ஆபாச நடனம் ஆபாச பாடல் ஆகியவை இருக்க கூடாது.

அரசியல் கட்சி சார்ந்த பாடல்களோ, மதம், சாதி சார்ந்த பாடல்களோ இருக்க கூடாது எனவும்  உத்தரவிட்டனர். மேலும், குட்கா போன்ற போதை வஸ்துக்களை உபயோகப்படுத்த கூடாது எனவும், மதுபானங்களை பருகி நடனம் ஆட கூடாது எனவும் கட்டுப்பாடுகள் விதித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கரகாட்டத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment