அண்ணன் உயிரிழந்த பின்பு அன்னிக்கு கள்ளக்காதல் மலர்ந்ததால், டிராக்டரை ஏற்றி கொலை செய்த கொழுந்தன்.
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்னா மாவட்டத்தில் உள்ள சாப்பல்கான் எனும் கிராமத்தில் கணவனை இழந்த விதவை பெண்மணி ஒருவர் தனது மாமனார் மற்றும் கொழுந்தனுடன் வாழ்ந்து வருகிறார். தற்பொழுது 32 வயதுடைய மரியா எனும் இந்த பெண் தனது 22 ஆவது வயதிலேயே அதாவது 10 வருடத்திற்கு முன்னதாகவே கணவரை இழந்துவிட்டார். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த பகவத் எனும் 27 வயதுடைய நபருடன் மரியா தொடர்பில் இருந்துள்ளார்.
இந்த விஷயம் அறிந்த அப்பெண்ணின் மாமனார் மற்றும் கொழுந்தன் ஆகிய இருவரும் கோபத்துடன் அடிக்கடி அதட்டி வந்துள்ளனர். கணவனின்றி வாழ்ந்து வந்த அப்பெண் இவர்களின் பிரச்சனை தாங்காமல் தனது கள்ளக்காதலன் பகவத் உடன் குஜராத்துக்கு ஓடி சென்றுள்ளார். காணவில்லை என இவர்களை குறித்து அவர்களின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் மகாராஷ்டிராவில் கொண்டு வந்து விட்டுள்ளனர்.
அதன் பின் இருவரும் அக்கிராமத்தில் சேர்ந்து வசித்து வந்ததால் அப்பெண்ணின் மாமனாரும், கொழுந்தனுக்கு அப்பெண்ணை கொலை செய்ய திட்டமிட்டு, டிராக்டரை ஏற்றி அப்பெண்ணையும், பக்கத்தையும் கொலை செய்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் இவர்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
IPL2024: பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில்…
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் வீடியோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…