கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தை…! போலீசார் தீவிர விசாரணை…!

தூத்துக்குடி ரோச் பூங்கா கடலில் உயிரிழந்த நிலையில் மிதந்து வந்த பச்சிளம் குழந்தையை மீட்ட போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்கா அருகே உள்ள கடலில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வரைந்த போலீசார் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். குழந்தையை கடலில் வீசியது யார்? குழந்தை தொப்புள் கொடியுடன் இருந்ததால் யாரேனும் வீட்டில் வைத்து பிரசவம் பார்த்து குழந்தையை கடலில் வீசி சென்றுள்ளார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment