தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது…!!

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு செய்யப்பட்டு காலியாக இருக்கும் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென்று  உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.18 எம்.எல்.ஏ.க்களை  சபாநாயகர் தகுதி நீக்கம் செய்ததும் , சபாநாயகர் உத்தரவுக்கு எதிராக  மேல்முறையீடு செய்வதில்லை என 18 எம்.எல்.ஏ.க்களும் அறிவித்துள்ளதால் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையில் வரும்  22ஆம் தேதிக்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment