மணமேடையில் மணமகளுக்கு முத்தமிட்ட மணமகன்..! மணமகள் எடுத்த விபரீத முடிவு..!

மணமேடையில் வைத்து மணமகளுக்கு மணமகன் முத்தமிட்டதால் நின்று போன கல்யாணம். 

கடந்த 27-ஆம் தேதி உத்திர பிரதேசத்தில், விவேக் அக்னிகோத்ரி என்ற இளைஞனுக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணுக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மணமக்கள் மாலைகளை மாற்றிக் கொண்ட நிலையில், மணமகன் திடீரென்று மணமகளுக்கு  முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சடைந்த மணமகள் அனைவரின் முன்னும் அவர் முத்தமிட்டது தனக்கு அவமானமாக கருதினார்.

மேலும் அந்த இடத்திலேயே ஆவேசம் அடைந்து, விழாவை நிறுத்தியதோடு இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மணமகளை சமரசம் செய்ய முயற்சி செய்த்தனர். ஆனால், போலீசாரின் முயற்சிகள் எடுபடவில்லை.

அவர் போலீசாரிடம் கூறுகையில் நாங்கள் மேடையில் இருந்த போது அவர் என்னை தகாத முறையில் தொட்டார்.  அவர் எதிர்பாராமல் செய்த செயலால் அதிர்ச்சடைந்தேன் மற்றும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். எதிர்காலத்தில் அவர் எப்படி நடந்து கொள்வார்  என்ற பயம் எனக்கு இருக்கிறது எனவே நான் அவருடன் செல்ல வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மணமகன் கூறுகையில், மணமகள் தன்னுடன் பந்தயம் கட்டியதன்  அடிப்படையில் தான் அவ்வாறு செய்ததாகவும், அனைவரின் முன்னும் முத்தமிட்டால் 1500 ரூபாய் தருவதாகவும், அவ்வாறு செய்ய  முடியாவிட்டால் 3 ஆயிரம் கொடுக்க வேண்டும் என்று  பந்தயம் கட்டியதாக கூறினார்.

மணமகனின் கருத்து குறித்து மணமகளிடம் விசாரித்த  போது தான் எந்த பந்தயமும் கட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment