பாலியல் வன்கொடுமை வழக்கில் 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது.! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.!

மும்பையில் 13வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் இருவர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த்தாக 8ஆம் வகுப்பு மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலையைஏற்படுத்தியுள்ளது.

மும்பை மாட்டுங்கா பகுதியில் உள்ள ஓர் பள்ளியில் கடந்த நவம்பர் 30-ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யபட்டதாக மும்பை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இரண்டு சிறுவர்கள் ஆவர். குற்றம் சாட்டப்பட்ட அந்த மைனர் சிறுவர்கள் இருவரும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் என்று மும்பை போலீசார் தெரிவித்தனர். இவர்கள் மீதுஇந்திய தண்டனை சட்டம் 376 (டி) மற்றும் போக்சோ
ஆகிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment