‘திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்த ஆளுநர்…!

தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்துள்ளதாக குற்றசாட்டு. 

2023ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை  கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இந்த சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநரின் உரையோடு தொடங்கியது. அந்த உரையில் அரசால் தயாரித்து கொடுக்கப்பட்ட உரையில் சில வார்த்தைகளை தவிர்த்து விட்டு வாசித்ததாகதிமுக கூட்டணி கட்சிகள் குற்றசாட்டுகளை முன்வைத்துள்ளனர். .

அந்த உரையில், அரசு தயாரித்த உரையில் தமிழ்நாடு, திராவிட மாடல் ஆகிய வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாகவும், அதேபோல் தமிழ்நாடு என்பதை தவிர்ப்பதற்காக தமிழ்நாடு கவர்மெண்ட் என்பதை திஸ் கவர்மென்ட் என மாற்றி படித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த உரையில் இருந்த பெரியார், அண்ணா, கருணாநிதி போன்ற தலைவர்களின் பெயர்களை வாசிப்பதையும் அவர் தவிர்த்ததாகவும், தமிழ்நாடு சட்ட ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது “தமிழ்நாடு அமைதி பூங்கா”வாக திகழ்கிறது என்ற வார்த்தைகளையும் வாசிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment