டெலிவரி பாயை காலனியால் அடித்த சிறுமி…! வைரலாகும் வீடியோ…!

தனது ஸ்கூட்டியில் இடித்த டெலிவரி பாயை செருப்பால் அடித்த சிறுமி. 

மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூரில், சிறுமி ஒருவர் தனது ஸ்கூட்டியில் இசவுக்கிலிருந்து சென்று கொண்டிருந்தார். அப்போது டெலிவரி பாய் ஒருவர் தவறான பாதையில் இருந்து வந்து அவரது ஸ்கூட்டியில் இடித்துள்ளார். இதனால் தரையில் விழுந்த அவர் மீண்டும் எழுந்து பைக் ஓட்டி வந்தவரை தனது காலனியால் அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அருகிலிருந்தவர்கள் சிறுமியை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அது யாருடைய பேச்சையும் கேட்காமல் இளைஞரை அடித்துக் கொண்டே இருந்துள்ளார். இந்த சம்பவத்தின் போது சிறுமி தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததாகவும் உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரல் ஆன நிலையில் ஓம்டி காவல் நிலையப் பொறுப்பாளர் எஸ்பிஎஸ் பாகேல் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை. ஏதேனும் புகார் தெரிவித்தால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.